கறவை மாடு வளர்ப்பு மற்றும் பாலில் மதிப்புக் கூட்டுதல்
பொருளடக்கம்
- அணிந்துரை
- முன்னுரை
- பதிப்புரை
- பசுமாடு வகைகள்
- மாட்டுக் கொட்டகைப் பராமரிப்பு
- தீவன மேலாண்மை
- இனப்பெருக்க மேலாண்மை
- பால் கறவை முறைகள்
- கன்று வளர்ப்பு முறை
- கறவை மாடுகளைத் தாக்கும் நோய்கள்
- பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள்
- பாலைப் பதப்படுத்துதல்
- தரக்கட்டுப்பாடு
- பாலேடு, வெண்ணெய், நெய்த் தயாரிப்பு
- சுவைமிகு பால், நறுமணப் பால் தயாரிப்பு
- பன்னீர், சன்னா, கோவா தயாரிப்பு
- ஐஸ்கிரீம் மற்றும் குல்பி தயாரிப்பு
- பாலாடைக் கட்டிகள் தயாரிப்பு
- பாலில் உறை சேர்த்துத் தயாரிக்கப்படும் பொருள்கள்
- பால் பேக்கேஜிங் முறைகள்
தொகுப்பாசிரியர்கள்
மரு.பா.வினோத், செல்வி ச.கோகிலவாணி, முனைவர் வெ.எ.நேதாஜி மாரியப்பன்
பதிப்புரை
ஒரு காலத்தில் குடும்பத் தேவைக்கு மட்டுமே என இருந்த கறவை மாடு வளர்ப்பு, இன்று ஊரக மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக மாறியுள்ளது. செம்புகளில் கறந்த நிலை மாறி, குடங்களில் கறக்கும் அளவுக்குப் பாலைத் தரும் பசுக்கள் வந்து விட்டன.
வசதியான மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பால், இன்று ஏழை, பணக்காரர் பேதமின்றி, எல்லோரும் பயன்படுத்தும் உணவுப் பொருளாக மாறி விட்டது.
எனவே, கறவை மாடுகள் வளர்ப்பில், அவற்றின் பராமரிப்பில் முக்கியக் கவனத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்தக் கவனம் இருந்தால் மட்டுமே, பால் உற்பத்தியைப் பெருக்க முடியும், எல்லோருக்கும் தேவையான பாலை வழங்க முடியும்.
அதைப்போல, பாலை விதவிதமான உணவுகளாகத் தயாரித்து உண்பதற்கான பதன நுட்பங்களும் வந்து விட்டன. இவற்றையெல்லாம் முறையாக அறிந்து கொள்ளும் போது, கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள், சிறந்த பொருளாதார மேம்பாட்டை அடைய முடியும்.
அந்த வகையில், கறவை மாடு வளர்ப்பு முறைகளையும், பாலிலிருந்து பல்வேறு உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் உத்திகளையும், பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஹன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில் நுட்ப வல்லுநர்கள் மருத்துவர் பா.வினோத், செல்வி ச.கோகிலவாணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே.எ.நேதாஜி மாரியப்பன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்துள்ளனர்.
அவர்களுக்குப் பச்சை பூமி சார்பில் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அருமையான நூலை, கறவை மாடுகளை வளர்ப்போரும், வளர்க்க விரும்புவோரும், படித்துப் பயனடைய வேண்டுகிறோம். நன்றி!
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

மருத்துவர் பா.வினோத் அவர்கள் பிறந்த இடம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம். பெற்றோர்: திரு.ரெ.பாண்டியன் திருமதி பா.கலைச்செல்வி. பள்ளிக்கல்வி: இராஜ விக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர், பெரம்பலூர் மாவட்டம். உயர்கல்வி: சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில், கால்நடை மருத்துவ அறிவியலில் இளங்கலைப் பட்டம்.
கேரள மாநிலம், மன்னூத்தியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் கால்நடை மருத்துவ அறிவியலில் முதுகலைப் பட்டம். இப்போதைய பணி: தொழில்நுட்ப வல்லுநர், கால்நடை அறிவியல் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.

செல்வி ச.கோகிலவாணி அவர்கள் பிறந்த இடம்: மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம். பெற்றோர்: திரு.ச.சக்திவேல், திருமதி ச.செல்வி. பள்ளிக்கல்வி: எஸ்.ஆர்.வி. பெண்கள் உயர்நிலைப்பள்ளி, இராசிபுரம், நாமக்கல் மாவட்டம். உயர்கல்வி: இளங்கலை அறிவியலில் மனையியல் பட்டம் மற்றும் முதுகலை அறிவியலில் உணவு மற்றும் ஊட்டச் சத்தியல் பட்டம், சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
இப்போதைய பணி: தொழில்நுட்ப வல்லுநர், மனையியல் துறை, ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.

முனைவர் வே.எ.நேதாஜி மாரியப்பன் அவர்கள் பிறந்த இடம்: அயனாவரம், சென்னை. பெற்றோர்: திரு.வே.எத்திராஜன், திருமதி எ.சுசிலா. பள்ளிக்கல்வி: அஞ்சுகம் உயர்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை. உயர்கல்வி: வேளாண் அறிவியலில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம்: அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம். முதுகலைப் பட்டம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.
இப்போதைய பணி: முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.


