சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் | தொகுதி – 1
பொருளடக்கம்
- பதிப்புரை
- விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி
- நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்
- மானாவாரி வேளாண்மை உத்திகள்
- பயிர்களைக் காப்பதில் வேம்பின் பங்கு
- பச்சைப்பயறு, உளுந்தைத் தாக்கும் நோய்கள்
- தோழமைப் பயிர்கள்
- பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உயிரியல் உத்திகள்
- மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்
- கலப்புப் பண்ணையம்
- ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள்
- கேழ்வரகைத் தாக்கும் நோய்கள்
- மஞ்சூரியன் தேயிலை வடிநீர்
- பார்த்தீனியத்தை அழிக்கும் மெக்ஸிகன் வண்டு
- தக்காளியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்
- நிலையான மண்வள மேலாண்மை
- தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி
- சேப்பங்கிழங்கைத் தாக்கும் இலைக்கருகல் நோய்
- வேளாண்மையில் காந்தச் சிகிச்சை
- தென்னையைத் தாக்கும் சுருள் ஈ
- கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்
- விளைச்சலைக் குறைக்கும் மாவுப்பூச்சி
- உருளைக்கிழங்கைத் தாக்கும் நோய்கள்
- பயறு வகைகளைத் தாக்கும் பூச்சிகள்
- பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்
- வாழையைத் தாக்கும் நோய்கள்
தொகுப்பாசிரியர்கள்
முனைவர் இராஜா.ரமேஷ், ப.நாராயணன், முனைவர் வி.சு.சுகந்தி
பதிப்புரை
இயற்கை வேளாண்மை, சூழல் மேலாண்மையை நோக்கமாகக் கொண்டு 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது பச்சை பூமி மாத இதழ். இதில், எல்லோரும் பாராட்டும் வகையில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல், மூலிகை சார்ந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.
சுற்றுச்சூழலின் முக்கிய அங்கமாக விளங்கும், இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் பச்சை பூமி இதழில், வேளாண்மை செழிப்பதற்கு உதவும் கால்நடை வளர்ப்புக் குறித்து, கால்நடை அறிவியல் அறிஞர்களும், இயற்கை வேளாண்மை குறித்து, வேளாண் அறிஞர்களும், பட்டறிவு மிகுந்த இயற்கை விவசாயிகளும், சூழல் அறிஞர்களும் இந்த இதழுக்கான செய்திகளை வழங்கி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, விவசாய உத்திகள் அடங்கிய தரமான நூல்களை வெளியிடுவதும் எங்கள் நோக்கமாகும். இவ்வகையில், சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் தொகுதி 1, மலர்கள் சாகுபடி உத்திகள் அடங்கிய, சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் 2 ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளோம். இப்போது, பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி உத்திகள் அடங்கிய, சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் தொகுதி 3 என்னும் இந்நூலை வெளியிட உள்ளோம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில் நுட்ப வல்லுநர் ப.நாராயணன், கோவைக் காருண்யா பல்கலைக்கழக மண்ணியல் துறை துணைப் பேராசிரியர் முனைவர் வி.சு.சுகந்தி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
வேளாண் பெருமக்களுக்கு இந்த நூல் பயனுள்ள நூலாக விளங்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. கட்டுரைகளை வழங்கிய வல்லுநர் பெருமக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வேளாண்மை செழிக்க உதவும் இந்த நூலை, அனைவரும் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

முனைவர் இராஜா.ரமேஷ் அவர்கள் பிறந்த ஊர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி. பெற்றோர், திரு.பனவெளி வ.இராஜாங்கம், திருமதி ஆண்டாள். திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், சர் சிவசாமி அய்யர் மேனிலைப் பள்ளியிலும் பயின்றார். பிறகு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், வேளாண் இளம் அறிவியல் படிப்பையும், மராட்டிய மாநிலம் அக்கோலாவில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடத்தில், பூச்சியியல் துறையில் வேளாண் முதுநிலைப் படிப்பையும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வையும் முடித்துள்ளார்.
தற்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பத்து ஆய்வுக் கட்டுரைகள், மூன்று நூல்கள், நான்கு கையேடுகள், ஐம்பது பொதுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும், விவசாயிகளுக்குப் பயிற்சிகள் மற்றும் செய்முறை விளக்கங்களை வழங்கியும் வருகிறார்.

ப.நாராயணன் அவர்கள் பிறந்த ஊர், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் உள்ள வெள்ளைக்கொட்டாய். பெற்றோர், திரு.பழனி, திருமதி ப.பச்சியம்மாள். திண்டல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியிலும் பயின்றார். பிறகு, 2007-2011 ஆம் ஆண்டுகளில், வேலூர் மாவட்டம், கலவையிலுள்ள ஆதிபராசக்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக் கல்லூரியில், வேளாண் இளம் அறிவியல் படிப்பையும், 2011-2013 ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், பயிர் நோயியியல் துறையில் முதுநிலைப் படிப்பையும் முடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஆறு மாதங்கள் முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்து விட்டு, 2014 முதல், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், பயிர்ப் பாதுகாப்புத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். சிறந்த கட்டுரையாளர் விருதைப் பெற்றுள்ள இவர், ஐந்து ஆய்வுக் கட்டுரைகளையும், முப்பத்தெட்டுத் தொழில்நுட்பக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும், விவசாயிகளுக்குப் பயிற்சிகள் மற்றும் செய்முறை விளக்கங்களை வழங்கியும் வருகிறார்.

முனைவர் வி.சு.சுகந்தி அவர்கள் பிறந்த ஊர் வேலூர். இவரின் பெற்றோர் திரு.வி.சுரேந்திரன், திருமதி சு.விஜயலட்சுமி. காஞ்சிபுரம் சோமசுந்தர கன்யா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், இளநிலை வேளாண்மைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார்.
உதகையில் பல ஆண்டுகள், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுத் துறையில் பணியாற்றியுள்ள இவர், தற்போது, காருண்யா பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு தொழில் நுட்பக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.


